MMM Kalaikoodam, Moonglaripatti, Kongupatti (po). Salem.

M.M.M. கலைக்கூடம் (சரிதை)

MMM Kalaikoodam

[1]M.M.manikkam

பெயர்          =  M.M.மாணிக்கம்

பெற்றோர்  =மலையக்கவுண்டர், ஆர முத்து

மனைவி  =கோவிந்தம்மாள், குள்ளம்மாள்

ஊர்            =மூங்கிலேரிப்பட்டி

பிறப்பு     =05.07.1945

கல்வி   =இரண்டாம் நிலை.

தொழில்=விவசாயம், சிற்ப, வர்ண , ஓவியம்

மதம்    =இந்து(வைணவம்)

மொழி  =தமிழ்

மாநிலம் =தமிழ்நாடு

நாடு   =இந்தியா

இறப்பு   =2021

பிறப்பு

மலையக்கவுண்ர் ஆரமுத்து தம்பதியினருக்கு 5,7,1945-இல் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள  மூங்கிலேரிப்பட்டி என்னும் குக்கிராமத்தில் மூன்றாவது மகனாக மாணிக்கம் பிறந்தார். முதல் மகன் கோவிந்தன்,இரண்டாவது மகன் நாராயணன் ,மூன்றாவதாக பிறந்த இவரின் இயற்பெயர் மாணிக்கம் என்றாலும், மக்கு மாணிக்கம் என்று அழைக்கப்பட்டார்.  சிறுவயதிலேயே இவரது தந்தை மறைந்தார். அதனால், சிறுவயதிலிருந்தே தாயும் சகோதர்களுடனும் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு வளர்ந்தார்.

குழந்தை பருவம்:

தனது ஏழாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே ஓவியம் புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். சிறுவயதில் இருந்தே சுற்றுப்புர சுவர்களில் கரிகட்டையால் மிருகங்கள் பறவைகள் பூக்கள் போன்ற ஓவியங்களை வரைந்து பலரின் கடும் பேச்சுக்கு ஆளானார்.ஊர் சுவர்கள் வெள்ளை சுண்ணாம்புடன் இருக்கவிடமாட்டார்.இவரின் குறும்புதனமான செய் கைகளால் தாயிடம் பலமுறை சூடு வாங்கி உள்ளார்.பத்து வயதிலேயே தந்தையை இழந்த நிலையில் அண்ணன் மட்டுமே விவசாய நிலங்களை பார்த்துக்கொள்ள தம்பிகள் இருவரும் பொறுப்பின்றி விளையாட்டுத்தனமாக திரிந்தனர் . கல்வியில் நாட்டமின்றி இரண்டாம் வகுப்போடு பள்ளியில் இருந்து  விலகிவிட்டார்.அக்காலங்களில் ஆசிரியர் அடிக்கு பயந்து படிப்பை பாதியில் விட்டு வெளியேறி விடுவது சாதாரணமாக இருக்கும்.பிறகு ஆடு மாடு மேய்க்கும் சூழல் ஏற்பட்டது.இடையில் கோவணத்தோடு ஆண்டிக்கோலத்தில் காடுகளிலும் மலைப்பாறைகளிலும் ஆடு,மாடுகளை விட்டு விட்டு பாறைகளில் பச்சை இலைகளைக் கொண்டு ஓவியங்கள் வரைந்து,ஆணியும் கற்கள் வைத்து அழியா ஓவியமாக வரைந்தார்.அன்று ஒருநாள் பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு பட்டி கூரையில் சகோதரன் செய்து வைத்திருந்த சோலத்தக்கை பொம்மையை எடுத்து விளையாடி உடைத்துவிட்டார்.பிறகு அண்ணன் கோபத்திற்கு ஆளாகி சோலதக்கை பிய்த்து கொள்ளும் வரை பல அடிகளுக்கு ஆளானார்.அதே கோபத்தில் தானாக சென்று அவரே அவருக்கு தேவையான பொம்மைகளைச் செய்தார்.இயற்கையாகவே ஓவியங்கள் வரையும் திறன் இருந்ததால்,இவர் செய்த பொம்மைகள் உயிரோட்டமாக இருந்தது. களிமண்,ஆட்டுச்சாணம் போன்ற கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு கலைப்பொருட்கள் செய்து நண்பர்களோடு விளையாடினார்.

இளமை பருவத்தில்:

  இவர் இளமை பருவத்தில் கிராம விழாக்களில் நண்பர்களோடு சேர்ந்து பலூன் கடை,காகித பூக்கள்,பனை ஓலை கைவினைப்பொருட்கள் சிறு சிறு வேலைகள் கற்று நாடோடி கூட்டமாக சுற்றி திரிந்தார். பின்னர் நண்பர்களோடு சேர்ந்து நாடகங்கள், தெருக்கூத்துகளில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அப்போது  சுற்றுவட்டாரத்தில் கலைநிகழ்ச்சிகள் எங்கே நடந்தாலும், கலை மீது கொண்ட ஆர்வத்துடன் பார்க்க சென்றுவிடுவார். ஒரு படைப்பை பார்த்ததும் அதே போல் செய்ய வேண்டும் என்ற ஆர்வமே அவரை மேம்பட்ட நிலையில் உயர்த்தியது. ஒரு முறை உறவினர்  ஊர் திருவிழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே நண்பர்களோடு சேர்ந்து வேடிக்கை பார்க்க சென்றவர் பின் பக்கம் சென்று பொம்மைகள் அலங்காரம் செய்வதும், பொம்மைகளை இலாவகமாக கையால்வதையும் கவனித்து, அதேபோல் வீட்டில் வந்து நண்பர்களோடு சோலதக்கை குச்சிகளால் பொம்மை செய்து விளையாடி வந்தார். அப்போது உள்ளூரில் பொங்கல் பண்டிகை நாட்களில் பொம்மலாட்ட குழு  நிகழ்ச்சி நடத்த வந்தனர். பொம்மைகள் பழுது நிறைந்த காரணத்தால், போக்கு சோதித்து வண்ணம் தீட்டி தர வெளியூரில் இருந்து கந்தசாமி என்ற சிற்பி இங்கே வந்தார். கலைமேல் மீது கொண்ட ஆர்வத்தால் அவரிடம் ஊரார் சிபாரிசு செய்ய இவர் எடுபிடி வேலைக்கு சேர்ந்தார். இதுவரை ஆறுவண்ணங்களைக் கொண்டு அரைகுறையாக தெரிந்து வைத்திருந்தவர் முதல் முறையாக ஆறு வண்ணங்களைக்  கொண்டு பல வண்ணங்கள் புதிதாக உருவாக்கப்படுவதை கவனித்தார். அதுவரை கிடைக்காத வண்ணங்களுக்காக பல கடைகளில் அலைந்து திரிந்தும் , கிடைக்காத திற்கும் ஒரு தீர்வு கிடைத்துள்ளது. வேலையின் மீது கொண்ட ஆர்வம் கண்டு கை வேலைக்கு சிற்பி தன்னுடன் அழைத்துச் செல்ல  இவர் தாயிடம் சொல்லவே, இவரின் தாய் மறுத்து விட்டார். காரணம் சிற்பிக்கு திறமை இருந்ததை விடவும் மதுவுக்கு அடிமையாக இருந்தார். ஆனால் இவர் மூன்று தலைமுறையாக வைணவ பாரம்பரிய ஏகாதிபத்திய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதனால் ஐந்து நாட்கள் மட்டுமே அவரால் ஒரு தொழில் நேர்த்தி கண்ட சிற்பியுடன் பணியாற்ற முடிந்தது.சில நாட்கள் வேலை செய்தாலும் அவரையே தன் ஆசான குருவாக என்னைக் கொண்டார். பின் சில நாட்கள் வைணவ திருத்தலங்களில் தங்கி வேத உபஞாசம் பெற்று வைணவ கைங்கர்யங்களில் ஈடுபாடு கொண்டவர் ஆவார் இவர். பிறகு இவர் ஊரில் உள்ள நண்பர்கள் பழைய பொம்மலாட்ட கம்பெனி ஒன்று விளைக்கு வாங்கினார்கள். அதை புதுப்பிக்க கந்தசாமி சிற்பியை தேடிய போது கிடைக்கவில்லை. அதனால் சில நாட்கள் மட்டுமே எடுபிடி வேலை பார்த்த இவரை சிலர் கை காட்டினார். இருப்பினும் ஒரு பதிமூன்று வயது சிறுவனை நம்பி பெரிய பொறுப்பை தர யோசித்தார். பிறகு இவர் ஒரு ஒப்பந்தம் செய்துகொல்ல அதை கம்பெனி நிர்வாகம் ஏற்றுக்கொண்டார். ஒப்பந்தம் என்னவென்றால் வண்ண வேலை செய்து தருகிறேன் வேலை நல்லா இருந்தா சம்பளம் கொடு. வேலை நல்லாயில்லை எனில் வண்ணத்தின் செலவோடு போகட்டும். இந்த ஒப்பந்தத்தோடு கலை மீது கொண்ட ஆர்வத்தால் மூன்று நாட்கள் இரவு பகல் பார்க்காமல் கண்விழித்து வேலை செய்தார். நேரம் காலம் பார்க்காமல் செய்த வேளை ஒரேயடியாக படுக்க வைத்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு கண்விழித்து பார்க்கும்போது அவர்கள் எதிர்பார்த்தை விடவும் மேம்பட்ட தரத்தில் இருந்தது. இதை கண்ட ஊர்மக்கள் ஒரு பதிமூன்று வயது சிருவனை பொம்மலாட்ட மேடையில் தூக்கி விருத்தி மலர் மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள். அன்றிலிருந்து தன்னை ஒரு அடையாளமாக மாற்றிக்கொண்டார். அதைத் தொடர்ந்து சுற்றுவட்டாரத்தில் பல கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாக உருவாகத் தொடங்கின. டிக்கெட் போட்டு நாடகம் நடத்தும் அளவிற்கு பிரபல இருந்தது. சில பொம்மலாட்ட கம்பெனி தியேட்டர் வைத்திருக்கும். ஆனால் இருபத்து ஐந்து காசு டிக்கட்டில் செலவு போக ஐந்து பைசா மட்டுமே லாபம் பார்க்க முடிந்தது. அனால் இங்கே பொம்மலாட்ட கம்பெனியில் இருபத்து ஐந்து காசும் அப்படியே லாபமாக கிடைக்க தியேட்டரே மூடும் சூழல் ஏற்பட்டது. சரியாக பயன்படுத்தி சிலர் முன்னேறினர். சிலர் நண்பர்களின் பொறுப்பற்ற தன்மையால் வீழ்ந்தனர்.ஆம் அதில் இவரும் ஒருவர். சரியான கல்வி இல்லாததால் ,யூகத்தின் அடிப்படையில் திட்டமிட்டு கடனில் கம்பெனியை விற்றுவிட்டு மனதில் பதிய வைத்து கொண்டார். அது என்னவெனில் "கூத்தாடி கொக்கரித்து திரிய வேண்டாம்" என்பதே.

குடும்ப வாழ்க்கை

தனது வாழ்க்கையை மீண்டும் வண்ணம் தீட்டுதலில் கவனம் செலுத்தினார்.மிதிவண்டி, மோட்டார் வாகனங்களுக்கு பெயர் பலகைகள் எழுதுதல் மற்றும் சுவர் விளம்பரம் போன்ற கிடைக்கும் வேளைகளில் தனது கைவண்ணத்தில் அலங்கரித்தார். தனது இருபதாவது வயதில் கோவிந்தம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.சில காலம் தாசனூரில் மளிகை கடை வைத்து குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். பிறகு திருக்கச்சி நம்பி, செல்வம் என்ற இரு மகன்களும் பிறந்தார்கள். பொறுப்புகள் அதிகரிக்க வேலைப்பளு அதிகரித்தது. தொடர்ந்து மளிகை கடை நட்டத்தில் இயங்க கடையை மூடிவிட்டு சொந்த ஊரான மூங்கிலேரிப்பட்டி வந்தார். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வரவே கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டது. தாயிடம் ஒரு பிள்ளை, தந்தையின் இடத்தில் ஒரு பிள்ளை என இருவரும் பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டது. மூத்த மகன் தாயிடம் வளரவே, தந்தையின் அனுபவத்தை சிறுவயதில் இருந்தே கற்றறிந்து இருப்பினும் ,தந்தை சிறுவயது தொழிலான ஆடுகள் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தந்தையுடன் வளர்ந்த இரண்டாம் மகன் தந்தை உடன் சேர்ந்து பயணிக்க அவர் தொழில் நுணுக்கத்தையும், அனுபவம் அனைத்தும் கற்றுத் தேர்ந்தார். ஒருமுறை கோவில் ஒன்றுக்கு கருட வாகனம் ஒன்று மரத்தில் செய்து தருமாறு வேலை வந்தது. மரவேலை அனுபவம் இல்லை என்றபோதிலும் முயற்சி செய்வதை கைவிடவில்லை. பல இடங்களில் விசாரித்து , பொம்மலாட்ட பொம்மை போக்கு சோதித்த மரங்களை ஆய்வு செய்து  எடை குறைவான  தனக்கன் மரத்தை தேர்வு செய்து, கொடு வால்,உளிகளினால் செதுக்கி ஒட்டு தெரியாத வண்ணம் ஆணிகளால் பூட்டி மர வேளைகளிலும் தனது கைவண்ணத்தைக் காட்டினார்.கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் பல நாட்கள் இரவு பகல் பாராமல் தூக்கத்தை மறந்து வேலை செய்தார். அதுவே உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படுத்தியது. பல வைணவ ஆலயங்கள், சுற்றுலா தளங்களில்  இயற்கையான சூழலில் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு அங்கே சென்று வந்தார். தனது  முப்பத்து ஐந்தாவது வயதில் குள்ளம்மாள் என்பவளை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.ஆங்காங்கே சிறு சிறு வேலைகளை செய்து வந்த சூழலில் முதல் முறையாக ஒரு சிறிய கோபுரம் வர்ண வேலை வாய்ப்பு வந்தது. அதை முதல் முறையாக செய்து தர ஒப்பந்தம் செய்யதார். கோபுரத்தின் புடைப்புச் சிற்பங்கள் உடைந்து பாழடைந்த நிலையில் இருந்தது.மக்கு பொம்மைகளை மட்டுமே செய்து வந்த இவருக்கு முதல் முறையாக சிமெண்ட் மணல் கலவை பயன்படுத்தி செய்ய வேண்டுய சூழல் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன் கட்டிட கலைஞர்களை விசாரித்து சிமெண்ட் கலவை ஒட்டு களை முதல் முறையாக தனது நாற்பதாவது வயதில் ஆரம்பித்தார். பின்னர் ஒரு நந்தி சிலை செய்ய தேடி வந்த போது முதல் முறையாக கலவையில் முழு சிலையும் செய்யும் வாய்ப்பு வந்தது. தனது முதல் தனி சிற்பத்தை முடிக்க ஒரு மாத கால அவகாசம் ஆனது. முதல் முறையாக சிமெண்ட் கலவை சிலை தனியாக செய்வதால் விழுந்து விடுமோ என்ற பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செய்து வந்தானர் தந்தையும் மகனும். படிப்படியாக அனுபவம் வரவே குறைந்த நாட்களில் சிற்பங்கள் செய்யும் அளவுக்கு தேர்ச்சி பெற்றனர். சுற்று வட்டார காவல் தெய்வங்கள் புனரமைப்பு  வேலைகள் வரவே முனி குதிரை சிங்கம் போன்ற பல வேளைகளில் தனது கைவண்ணத்தைக் காட்டினார். எந்த ஒரு இடத்திலுமே தனது தன்னம்பிக்கை, துணிவே துனை என்று மனதில் என்னைக்கொண்டே தனது பணியைத் தொடர்ந்தார்.

  1. ^ MMM Kalaikoodam M.M.manikkam பெயர்          =  M.M.மாணிக்கம் பெற்றோர்  =மலையக்கவுண்டர், ஆர முத்து மனைவி  =கோவிந்தம்மாள், குள்ளம்மாள் ஊர்            =மூங்கிலேரிப்பட்டி பிறப்பு      =05.07.1945 கல்வி    =இரண்டாம் நிலை. தொழில் =விவசாயம், சிற்ப, வர்ண , ஓவியம் மதம்    =இந்து(வைணவம்) மொழி  =தமிழ் மாநிலம் =தமிழ்நாடு நாடு    =இந்தியா இறப்பு    =2021